Vastu Tips: இதை செய்தால்போதும்; பணப் பற்றாக்குறை நீக்க லட்சுமி அருள்பொழிவாள்

Vastu Tips: வீட்டில் அடிக்கடி பணப் பிரச்சனை இருந்தால் அல்லது கடினமாக உழைத்த பணம் மிச்சமாகாமல் இருந்தால், சில வாஸ்து வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நிதிப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 9, 2022, 06:08 AM IST
  • வீட்டில் பணம் தங்கவில்லையா?
  • பணப் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?
  • உங்கள் குறைகளை போக்கும் வாஸ்து குறிப்பு
Vastu Tips: இதை செய்தால்போதும்; பணப் பற்றாக்குறை நீக்க லட்சுமி அருள்பொழிவாள் title=

Good Luck Tips for Money: உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை இருக்கிறதா?, பணம் வந்தவுடனேயே செலவுகள் காத்திருக்கிறதா? பணம் தங்காமல் இருக்கிறது என நீங்கள் வருந்திக் கொண்டிருக்கிறீர்களா?, ஏதாவதொரு வழியில் மிகவும் சிரமப்பட்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறீர்களா?. இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று பதில் அளித்தால் பிரச்சனையை போக்க வாஸ்து சாஸ்திரத்தில் சில வழிகள் உள்ளன. அதனை பின்பற்றினால் லட்சுமி அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் விரைவாக நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு விடுவீர்கள்.  

மேலும் படிக்க | புத ஆதித்ய யோகம்: சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம் எந்த ராசிகளை பாதிக்கும்

அனைவரின் ஆசை

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பணக்காரனாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இதன் மூலம் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்துடன் இருக்கலாம் என நம்புகிறான். உலகப் பணக்காரனாக வேண்டும் அல்லது உள்ளூரிலேயே பணக்காரனாக வேண்டும் என்பதெல்லாம் பெரும்பாலானோரின் இலக்காக இருப்பதில்லை. வீட்டில் வறுமை இல்லாமல், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து நிம்மதியாக வாழ வேண்டும். பண இல்லாமல் துன்பப்படக்கூடாது என்பது தான் எல்லோருடைய விருப்பமும். வீட்டில் இருக்கும் குழந்தை ஒன்று கேட்டால் அதனை உடனே வாங்கிக் கொடுக்க கையில் பணம் இருக்க வேண்டும். அது கூட இல்லையே என வருந்தும் நிலை இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் ஏராளம். அப்படி இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு வாஸ்துவில் வழிமுறை இருக்கிறது. 

வீட்டில் இந்த சிலையை நிறுவுங்கள்

நீங்கள் வறுமையைத் தவிர்க்க விரும்பினால், சில பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும். அவற்றை வைத்திருந்த பிறகு, வீட்டிற்கு ஒருபோதும் வறுமை வராது. அவற்றில் முதன்மையானது விநாயகர் சிலை. விநாயகர் விக்னஹர்தா என்றும் அழைக்கப்படுகிறார். வீட்டில் எந்தப் புதிய வேலைகள் தொடங்கினாலும் முதலில் விநாயகரை வழிபடுவார்கள். விநாயகப் பெருமான் எல்லாத் தடைகளையும் அழிப்பவராகக் கருதப்படுகிறார். முதலில் விநாயகரை வழிபடுவதால், நீங்கள் தொடங்கும் எந்த வேலையும் கெடுவதில்லை. விநாயகரை வணங்கும்போது பலன் மட்டுமே உண்டு என்றும், ஒவ்வொருவரும் வீட்டில் ஒரு விநாயகர் சிலையாவது வைக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த சிலையை வீட்டில் வைக்கும் போது, ​​அவரது பார்வை வீட்டின் பிரதான வாசல் மீது படும் வகையில் இருக்குமாறு கவனம் செலுத்துங்கள். இப்படி செய்வதால், லட்சுமி வீட்டில் சீக்கிரம் வருவாள், வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. 

மேலும் படிக்க | கன்னி ராசியில் வக்ரமடையும் புதன்; மகத்தான வெற்றிகளை அடைய உள்ள '4' ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News