இந்திய ரசிகர்கள் நையாண்டி... கண்ணீர் விட்டு அழுத ஆஸி ரசிகர்!

உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அதனை இந்திய ரசிகர்கள் கொண்டாட, அவர்களுக்கு அருகில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் வைரலாகியுள்ளது.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Oct 13, 2023, 12:04 PM IST
  • இந்திய அணியிடம் தோற்ற ஆஸி
  • சேப்பாக்கத்தில் கிண்டலடித்த இந்திய ரசிகர்கள்
  • தேம்பி தேம்பி அழுத ஆஸ்திரேலிய ரசிகர்
இந்திய ரசிகர்கள் நையாண்டி... கண்ணீர் விட்டு அழுத ஆஸி ரசிகர்!

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டு வெற்றிகளுடன் வெகு சிறப்பாக தொடங்கியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி, மிக மோசமான இடத்தில் இருக்கிறது. கம்பீரமான அணியாக கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இம்முறை பொட்டி பாம்பாக அடங்கி ஒடுங்கிப் போய் இருக்கிறது. அந்த அணியிடம் இருந்து வெளிப்படும் ஆக்ரோஷமான ஆட்டம் இரண்டு போட்டிகளிலும் ஒரு இடத்தில் கூட வெளிப்படவில்லை. இதனால், தோல்வியே பரிசாக கிடைத்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source

முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. அப்போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அப்போதே ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா துறையிலும் ஒரு சுணக்கம் இருப்பதை கிரிக்கெட் வல்லுநர்களும் ரசிகர்களும் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆக்ரோஷமாகவும், எதிரணி மீது ஆதிக்கம் செலுத்துவதையும் கடந்த ஒரு தசாப்தத்தில் மற்ற அணிகளுக்கே கற்றுக் கொடுத்த அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். அந்த அணியின் இந்த அணுகுமுறையோடு தான் எல்லா ஐசிசி போட்டிகளிலும் களமிறங்கும்.

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

அப்படியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது என்பதே பெரும் சவாலாக இருக்கும். ஆனால் இந்த உலக கோப்பையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அந்த ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. இந்திய அணியுடன் தோல்வி அடைந்தபிறகு வீரர்கள் அனைவரும் கைக்குலுக்கி கொண்டு வெளியேறும் சமயத்தில் சேப்பாக்கம் கேலரியில் இருந்த இந்திய அணியின் ரசிகர்கள் வெற்றியை செம உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர். அப்போது அங்கிருந்த ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்களுக்கு முகம் வாடிப்போய் இருந்தது. ஒரு ஆஸ்திரேலிய ரசிகர் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து, அழுதே விட்டார். கண்ணீர் விட்டு அவர் அழும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. 

இந்திய அணியிடம் தான் ஆஸ்திரேலிய அணி படுமோசமாக தோற்றது என்றால், அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியிடமும் படு தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த இரு போட்டிகளிலும் அந்த அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. ஒரு முறைகூட 200 ரன்களை தொடவில்லை. அடுத்த போட்டியிலாவது 5 முறை உலக கோப்பை சாம்பியன் தோல்வியில் இருந்து மீண்டு வருமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News