IPL 2019; டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு!

IPL 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!

Last Updated : Apr 11, 2019, 07:39 PM IST
IPL 2019; டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு! title=

IPL 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!

IPL 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஜெய்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

IPL 2019 தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. எனினும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு மிக அருகில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி மற்ற அணிகளுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது எனலாம்.

எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இன்றைய ராஜஸ்தான் அணியில் கிருஷ்ணப்பா கௌதமிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

சென்னை அணி பொருத்தவரையில் அம்பத்தி ராயுடு மீண்டும் 4-வது இடத்தில் களமிறங்குவார் என தெரிகிறது. IPL 2019 தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News