ரோகித் ஷர்மா-வுக்கு ரெஸ்ட்... அணிக்கு திரும்பும் பூம்ரா...

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜாஸ்பிரீத் பூம்ரா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் உள்நாட்டு தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 23, 2019, 05:56 PM IST
ரோகித் ஷர்மா-வுக்கு ரெஸ்ட்... அணிக்கு திரும்பும் பூம்ரா... title=

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜாஸ்பிரீத் பூம்ரா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் உள்நாட்டு தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேவேளையில் குறித்த தொடரின் டி20 போட்டியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 25 தையல்களுடன் ஓய்வில் சென்ற ஷிகர் தாவன் எதிர்வரும் தொடரில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பினை ஐந்து பேர் கொண்ட குழு கூட்டத்தின் பின்னர் தேர்வாளர்கள் தலைவர் MSK பிரசாத் வெளியிட்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் நிகர அமர்வின் போது பும்ரா முதுகில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தாழ்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனவரி 5 துவங்கி ஜனவரி 10-ஆம் நாள் வரை, மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கையை இந்தியா எதிர்கொள்கிறது. இதனைத்தொடர்ந்து ஜனவரி 14 துவங்கி ஜனவரி 19-ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த இரு தொடர்களிலும் ஹிட் மேன் ரோகித் ஷர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மொகது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பும்ராவைப் பொறுத்தவரை, இந்திய அணியின் பிசியோ நிதின் படேல் மற்றும் பயிற்சியாளர் நிக் வெப் அவரை விசாகப்பட்டினத்தில் (இந்த வார தொடக்கத்தில்) சோதனை செய்தனர். அவர் அங்கு முழு வீச்சில் வீசினார். ஆஸ்திரேலியா தொடர் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குவதால், அவர் ஒரு ரஞ்சி விளையாட்டை விளையாடலாம் என்று கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், விராட் கோலி அதை எவ்வாறு பார்க்கிறார் என்பதையும் பொறுத்தது பூம்ராவின் இருப்பு அமையும்" என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News