ISSF உலககோப்பை தங்கம் வென்றார் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்!

Last Updated : Feb 24, 2019, 06:08 PM IST
ISSF உலககோப்பை தங்கம் வென்றார் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி title=

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்!

ISSF உலக கோப்பை 2019 தொடர் புதுடெல்லியில், கடந்த வியாழன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.  இத்தொடரின் ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

முன்னதாக நேற்று நடைப்பெற்ற போட்டியில் மகளிர் 10m பிரிவில் இந்தியாவின் சண்டேலா தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 252.9 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்த அபூர்வி, உலக கோப்பை துப்பாக்கி சுடதல் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னதாக மகளிர் 10m பிரிவில் இந்தியாவின் அஞ்சலி பகாவத் தங்கம் வென்று முதல் இந்திய பெண் என்னும் பெருமையினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News