Winter Olympics: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் தரம் குறைந்த உணவு? பகீர் புகார்

'எனது எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன, நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன்' குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் ரஷ்ய தடகள வீராங்கனையின் குற்றச்சாட்டு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2022, 10:08 AM IST
  • பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் தரம் குறைந்த உணவு
  • ரஷ்ய வீராங்கனை குற்றச்சாட்டு
  • ஆளுக்கு ஏற்றாற்போல உணவு வழங்கப்படுகிறது -குற்றச்சாட்டு
Winter Olympics: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் தரம் குறைந்த உணவு? பகீர் புகார் title=

பெய்ஜிங்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் உணவு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 'எனது எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன, நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன்' என்று ரஷ்ய தடகள வீராங்கனை குற்றம் சாட்டுகிறார்.

தரம் குறைந்த உணவுக்காக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களை, ரஷ்ய தடகள வீராங்கனை கடுமையாக சாடியுள்ளார். 

விளையாட்டு தொடர்பான பணியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே COVID-19 வழக்குகள் அதிகரித்துள்ள போதிலும், பெய்ஜிங்கில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் 2022 ஐ நடத்தும் சீனா ஏற்கனவே பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொள்கிறது

இந்த நிலையில், விளையாட்டுப் போட்டிகளில் COVID-19 பாதித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு 'சாப்பிட முடியாதது' என்று ரஷ்ய தடகள வீராங்கனை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாப்பிட முடியாத உணவு, விளையாட்டு வீரர்களுக்கு போதுமான உணவு இல்லை மற்றும் பயிற்சி உபகரணங்கள் இல்லாதது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பெய்ஜிங் விளையாட்டுகள் தொடர்பாக வெளிவந்துள்ளது.

தற்போது, தனிமைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர்கள், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதற்காக அமைப்பாளர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் போது COVID-19 பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்த தடகள வீரர்களில் ஒருவரான ரஷ்யாவின் பயத்லான் போட்டியாளரான வலேரியா வாஸ்னெட்சோவா (Russia's biathlon competitor Valeria Vasnetsova), இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

sports
 
பெய்ஜிங்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்படும் உணவை புகைப்படம் எடுத்து ப் படத்தைப் பகிர்ந்து கொண்டார் வாஸ்நெட்சோவா. அதில், பாஸ்தா, சில உருளைக்கிழங்குகள்,  இறைச்சி மற்றும் ஆரஞ்சு சாஸ் ஆகியவை உள்ளன. "ஐந்து நாட்களாக காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு இது" என்று வாஸ்னெட்சோவா கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து தினமும் அழுதுகொண்டிருப்பதாகவும், சத்தான மற்றும் சரியான உணவு இல்லாததால் அவரது எலும்புகள் வெளியே தெரியத் தொடங்கிவிட்டதாகவும் ரஷ்யர் குற்றம் சாட்டியுள்ளார். தான் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விழாக்களை புறக்கணிக்கும் இந்தியா

"என் வயிறு வலிக்கிறது, என் கண்களைச் சுற்றி பெரிய கருப்பு வட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும். நான் தினமும் அழுகிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்," என்று வாஸ்னெட்சோவா தனது இன்ஸ்டாகிராமில் எழுதினார். 

வாஸ்நெட்சோவா தனது பதிவில் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டார், மேலும் பெய்ஜிங்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் இருக்கும் சாதாரண விளையாட்டு தொடர்பான பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, கோவிட்-19 இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு குறைவான மற்றும் தரம் குறைந்த உணவு வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தனக்காக விட்டுச்சென்ற உணவை அவளது கதவுக்கு வெளியே எடுக்கும்போது, ​​​​தனது தாழ்வாரத்தில் உள்ள மற்ற அறைகளுக்கு வெளியே விடப்பட்ட பெட்டிகள் வித்தியாசமாக இருப்பதை அவர் கவனித்திருக்கிறார்.

ALSO READ | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான்

ஒலிம்பியன்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பணிபுரியும் நபர்களை வேறுபடுத்துவதற்கான அடையாளங்களுடன் கதவுகள் பெயரிடப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உணவு வேறுபட்டது என்றும் விளையாட்டு வீரர்களுக்கான பெட்டியில் மோசமான உணவு இருந்ததாகவும் ரஷ்ய வீராங்கனை கூறினார்.

தனது குழு மருத்துவரிடம், தனக்கு வழங்கப்பட்ட உணவின் விவரங்களையும் பகிர்ந்து கொண்டார், அவர் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்து அதே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். குழு மருத்துவருக்கு ப்ரோக்கோலியுடன் புதிய பழங்கள், சாலட் மற்றும் இறால்கள் வழங்கப்பட்டதாக வாஸ்னெட்சோவா கூறினார்.

"விளையாட்டு வீரர்களான எங்களுக்கு ஏன் இந்த அணுகுமுறை? எனக்கு சத்தியமாக புரியவில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டை அடுத்து, விளையாட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

ரஷ்ய பயத்லான் குழுவின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி அவெரியனோவ் அவருக்கு சிறந்த உணவு வழங்கப்படுவதை உறுதிப்படுயதாகவும், பயிற்சிக்குத் தேவையான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை தெரிவித்துள்ளது.  

ALSO READ | U19 WC உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News