ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐந்தாவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

Last Updated : Dec 30, 2017, 09:19 AM IST
ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்! title=

சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம் காலம் வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐந்தாவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை கடந்த 26-ம் தேதியில் இருந்து சந்தித்து வருகிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐந்தாவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். 

அப்போது பேச துவங்கிய அவர்; இன்னும் ஒரு நாட்கள் தான் உள்ளது என பேச துவங்கினார். அவர் எதாவது ஆவலாக தெரிவிப்பார் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு உங்களை இனி நான் எப்போது சந்திப்பேனோ மிஸ் யூ என கூறினார். 

இதைதொடர்ந்து, நாளை அவர் அரசியளுக்கு வருவேனா மாட்டேனா என்பது பற்றி என்ன தெரிவிப்பறூ என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். 

 

 

Trending News