பிரேக்-அப் பயத்தில் காதலியின் ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட காதலன்!

தேனி மாவட்டம் அருகே காதலி சரியாக பேசவில்லை என்ற ஆத்திரத்தில் ஆபாச போட்டோக்களை இணையத்தில் பதிவிட்ட காதலன் கைது செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2022, 10:37 AM IST
  • பிரேக்-அப் பயத்தில் காதலியின் ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட காதலன் கைது.
  • வீடியோ காலின் ஸ்கிரீன்ஷாட்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த காதலன்.
பிரேக்-அப் பயத்தில் காதலியின் ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட காதலன்! title=

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(23). இவர் கோவையில் தங்கி அரசுக்கல்லூரியில் பயின்றுள்ளார். அப்போது, அதே கல்லூரியில் ஒன்றாக படித்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான செல்போன் உரையாடலின் போது கோபிநாதன் அந்த இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ காலில் வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

breakup

காதலின் போதையில் செய்வதறியாது அப்பெண்ணும் வீடியோ கால் செய்துள்ளார். அதனை கோபிநாதன் தனது செல்போனில் அப்பெண்ணிற்கு தெரியாமல் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்துள்ளார்.

இதனையறியாமல் அப்பெண்ணும் அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது.

இதன் காரணமாக அந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. கோபிநாதனும் அப்பெண்ணிடம் பேச பல்வேறு வழிகளில் முயன்றும் முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் தனக்கு பிரேக்-அப் ஆகிவிடுமோ என்ற பயத்தில் காதலன் கோபிநாத் இருந்துள்ளார்.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் நண்பரிடம் ரூ.73 லட்சம் பறிகொடுத்த 67 வயது மூதாட்டி!

breakup

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோபிநாதன் தான் காதல் வயப்பட்டிருந்த போது தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபிநாதனை கைது செய்தனர்.

இவ்வாறு கண்மூடித்தனமான காதலினால் இளைஞர்களும் அவர்களது பெற்றோரும் அவமானப்படும்படி ஒரு சூழ்நிலையில் பலருக்கு ஏற்படுகிறது. இதை புரிந்துக்கொண்டு பெண்களும் ஆண்களும் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என போலீஸார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க | இன்று வளைகாப்பு: நிறை மாத கர்ப்பிணி மரணம்! சந்தேகம் எழுப்பும் தந்தை! என்ன நடந்தது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News