மின்கட்டண உயர்வு: அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

AIADMK protest in Tamil Nadu: தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது உள்ளிட்டவற்றை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 25, 2022, 02:06 PM IST
  • அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
  • மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
  • ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மின்கட்டண உயர்வு: அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் title=

அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், சொத்துவரி, மின்கட்டணம் உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன் ஒருபகுதியாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்தும், சொத்துவரி, மின்கட்டண உயர்வினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.

மேலும் படிக்க | எந்த நெருக்கடி வந்தாலும் மீனவர்கள் கைது தொடர்கிறது - வேதனைப்படும் வைகோ

ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்தும், சொத்துவரி, மின்கட்டண உயர்வினை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், மேட்டுப்பாளையம் எம்எல்ஏ-வுமான ஏ.கே.செல்வராஜ், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான தனபால், முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நகர கழக செயலாளர் வான்மதிசேட் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அதே போல் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., தமிழக ஹஜ்கமிட்டி தலைவர் சிடிசி அப்துல் ஜப்பார்,ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாைளயம் பஸ் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் படிகக் | பேனா சின்னமா?... ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்யுங்கள் - அரசுக்கு விஜயகாந்த் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News