பேனா சின்னமா?... ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்யுங்கள் - அரசுக்கு விஜயகாந்த் அட்வைஸ்

மக்கள் வரிப்பணத்தில் கடலுக்குள் பேனா சின்னம் வைக்காமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களை தமிழக அரசு செய்ய வேண்டுமென்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 24, 2022, 03:59 PM IST
  • மெரினா கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு
  • கண்ணாடி பாலமும் அமைக்க திட்டம்
  • இந்தத் திட்டத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவிக்கின்ற்னார்.
பேனா சின்னமா?... ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்யுங்கள் - அரசுக்கு  விஜயகாந்த் அட்வைஸ் title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு 780 கோடியில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, அயல்நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது, வேலை வாய்ப்பின்மை, கொரோனா பரவல் காரணமாக வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் பல டன் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது.  மேலும் தமிழகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 

மேலும் படிக்க | மின் கட்டண உயர்வு... தமிழக அரசை மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை - பாஜக துணை தலைவர்

இவ்வாறு திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம். நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.

Pen Statue

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது. மக்களின் வரி பணத்தை வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தம்பி செந்தில் பாலாஜி பாஜக டார்ச்சர் செஞ்சா சொல்லு நான் பார்த்துக்குறேன் - களத்தில் சீமான்

தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னம் அமைப்பது ஏற்புடையது அல்ல. நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும். 1996 ஆம் ஆண்டு திரை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்த கருணாநிதிக்கு பொன் விழாவின் போது அவரது புரட்சி வசனங்களுக்கு பரிசாக மிக பிரம்மாண்டமான தங்கப் பேனாவை திரையுலகத்தின் சார்பாக ஏற்கனவே வழங்கியுள்ளதை நினைவு கூறுகிறேன். எனவே மீண்டும் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News