கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!

-

Last Updated : May 11, 2017, 11:58 AM IST
கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் சுற்றறிக்கை! title=

கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:-

கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் உடைமைகளை ஜப்தி செய்யக் கூடாது. கடன் வசூல் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை, நோட்டீஸ் அனுப்புதல் போன்ற எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. 

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால கடன்கள், மத்திய கால கடன்களாக மாற்றப்பட்டுள்ளது.  கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் விவசாய கடன் வழங்க வேண்டும்” 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News