வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.. வீதிகளில் வேண்டாம்: TN Govt

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை ஊர்வலமகா கொண்டு செல்லவும், பொது இடங்களில் சிலை வைப்பதற்கும் அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2020, 01:07 PM IST
வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.. வீதிகளில் வேண்டாம்: TN Govt title=

சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை ஊர்வலமகா கொண்டு செல்லவும், பொது இடங்களில் சிலை வைப்பதற்கும் அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரவர் வீடுகளிலேயே விநாயர் சதுர்த்தியை (Ganesh Chaturthi 2020) கொண்டாட வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுக்குறித்து தமிழக அரசு (TN Govt)  சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா பொதுமுடக்கம் (Lockdown) அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். கொரோனா கட்டுபப்டுத்தும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

ALSO READ | Ganesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

நாடு முழுவதும் ஆண்டிதோறும் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயின் அச்சம் தான் காரணம். ஏற்கனவே ஊரடங்கு (Lockdown) உத்தரவால் சுமார் மூன்று மாதக் காலம் அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது பல மாநிலங்களில் கோயில்கள் திறக்க அனுமதி அரசு அளித்துள்ளது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி அளிக்குமா? இல்லையா? என்று கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. இன்று தமிழக அரசு (TN Govt) சார்பில் அதற்கான பதில் கிடைத்துள்ளது.

Trending News