கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத்துகிறது - முத்தரசன்!

மக்களைப்பற்றி கவலைப்படாத, பொறுப்பற்ற அரசாக புதுவை அரசு செயல்படுகிறது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 04:34 PM IST
  • ஆட்சி அமைந்து 7 மாதமாகியும் எந்த நிதியும் வரவில்லை. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது.
  • பொதுத்துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, ரேசன்கடைகள் இயங்கவில்லை.
கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத்துகிறது - முத்தரசன்!  title=

இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் புதுச்சேரியில் (Puducherry) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது, " புதுவையில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம், தாராள நிதி தருவோம் என வாக்குறுதி அளித்தனர். இதை நம்பி மக்கள் ஓட்டளித்ததால் வெற்றியும் பெற்றனர்.  ஆட்சி அமைந்து 7 மாதமாகியும் எந்த நிதியும் வரவில்லை. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. 

ALSO READ | அரசு மருத்துவமனையில் போதையில் மட்டையான மருத்துவர்

பொதுத்துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, ரேசன்கடைகள் இயங்கவில்லை, 
பொங்கல் பொருட்கள் பண்டிகை முடிந்தும் தரவில்லை. கடந்த நாராயணசாமி ஆட்சியில் கவர்னர் மூலமாக அரசை முடக்கம் செய்யும் பணியில் பா.ஜனதா (BJP Party) ஈடுபட்டது. தற்போதும் அதேநிலைதான் தொடர்கிறது.  கொரோனா 3வது அலையை தடுக்க தமிழகம் உட்பட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம், விழாக்களுக்கு தடை விதித்தனர்.  ஆனால் புதுவையில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அனுமதித்தனர். இதன் பயனாக நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. 

mutharaasan

மக்களைப்பற்றி கவலைப் படாத, பொறுப்பற்ற அரசாக புதுவை அரசு  செயல்படுகிறது, இதனால்  மக்கள்தான் அவதிப்படு கின்றனர். 
தேர்தலில் ரங்கசாமி அனைத்து வாக்குறுதிகளையும் அளித்தார். தற்போது பொறுப்பில்லாத வகையில் தான் ராஜா இல்லை என கூறுகிறார். அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.  கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று 10 மாதமாகி விட்டது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத் துகிறது.

ALSO READ | வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவர் கைது!

ஜனாதிபதி, கவர்னர், சபாநாயகர் ஆகியோர் அரசியல்பாகுபாடு இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சியில் இவை தூக்கியெறியப்பட்டு கவர்னர்கள் பாகுபாடோடு செயல்படுகின்றனர். 
பா.ஜனதா நடத்தும் விழாக்களில் கவர்னர் பங்கேற்கிறார். தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல" என்று தெரிவித்தார்.

ALSO READ | அடிச்சிட்டான்யா அடிச்சிட்டான்!! ஆட வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News