விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

Last Updated : Oct 21, 2019, 07:47 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! title=

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இதேப்போன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலை அடுத்து வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினரும் ஈடுபடுகிறார்கள். காமராஜ் நகர் தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வாக்குசாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News