வெடிகுண்டு மிரட்டல், முன்னாள் ரயில்வே ஊழியர் கைது

Last Updated : Apr 25, 2017, 02:33 PM IST
வெடிகுண்டு மிரட்டல், முன்னாள் ரயில்வே ஊழியர் கைது title=

4 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு மாவோயிஸ்டுகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் 4 ரயில்களை வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி நெல்லை ரயில்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணம் அருகில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்றும், தூத்துக்குடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் அருகில் தகர்க்கப் போவதாகவும் மாவோயிஸ்டுகள் அனுப்பிய மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மிரட்டல் கடிதத்தில் 9 செல்போன் எண்களை குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த செல்போன் எண்கள் யாருடையவை என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மிரட்டல் கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியர் கங்காதரனை, அரக்கோணத்தில் போலீசார் கைது செய்தனர்.

Trending News