தொடர் மழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!!

Last Updated : Nov 4, 2017, 09:08 AM IST
தொடர் மழை: சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!! title=

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். 

சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் மழை நீடித்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் மழையை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பபடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News