ஆன்லைன் காதலா? அப்பா பார்த்த மாப்பிள்ளையா? சென்னை பெண்ணின் முடிவால் பரபரப்பு !!

ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பழக்கத்தில் உருவான காதலால், சென்னையில் வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2021, 09:30 AM IST
ஆன்லைன் காதலா? அப்பா பார்த்த மாப்பிள்ளையா? சென்னை பெண்ணின் முடிவால் பரபரப்பு !! title=

ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட காதலால், சென்னையில் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் ஒருவர் கரம்பிடித்தார். இதனால் அவரது குடும்பத்தில் மட்டுமில்லாமல், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகள் ராஜலெட்சுமி (வயது 30). இவருக்கும், சென்னை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமண ஏற்பாடு நடந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 30-ஆம் தேதி கடைக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ராஜலட்சுமியின் பெற்றோர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் (TN Police) வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜலட்சுமியை தேடி வந்தனர். 

ALSO READ | திருப்பூரில் பயங்கரம்: பணத்திற்காக கல்குவாரி அதிபர் லாரியில் கடத்திக் கொலை!!

இதற்கிடையே ராஜலட்சுமியின் சகோதரர் சங்கரநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  இதனை தொடர்ந்து போலீசார் ராஜலட்சுமியின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர். அப்போது அவர் கேரள பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் நெருங்குவதை அறிந்த ராஜலட்சுமி, வாலிபர் ஒருவருடன் குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் தெரிய வந்தன. ஆன்லைனில் பிரீபையர் கேம் விளையாடுவதில் ராஜலட்சுமி ஆர்வமிக்கவராம். அதில் விளையாடும் போது 3 மாதத்துக்கு முன்பு குமரி மாவட்டம் அருமனை காரோடு பகுதியை சேர்ந்த மேத்யூ ஜாண் (29) என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

இந்த காதலை அவரால் மறக்க முடியவில்லை. இதனால் அவர் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை புறக்கணிக்க முடிவு செய்தார்.

இதன் காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய ராஜலட்சுமி, கேரள மாநிலம் மூணாறில் உள்ள கோவிலில் மேத்யூ ஜாணை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் காதல் ஜோடி அருமனை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும் தெரியவந்தது. மேத்யூ ஜாண் கேரளாவில் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

பின்னர் போலீசார் இருவீட்டு குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதல் ஜோடி இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். தொடர்ந்து அவர்களை வாழ்த்தி போலீசார் அனுப்பி வைத்தனர். 

ஆன்லைன் விளையாட்டில் (Online Games) ஏற்பட்ட பழக்கத்தில் உருவான காதலால், சென்னையில் வாலிபருடன் நடக்க இருந்த திருமணத்தை உதறி விட்டு குமரி வாலிபரை இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

ALSO READ | Police: சினிமா பாணியில் கள்ளநோட்டு கும்பலை துரத்தி பிடித்த தமிழக போலீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News