சட்டசபைதேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!!

5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 76.41 சதவீதமும், நாங்குநேரி தொகுதியில் 62.32 சதவீதமும் வாக்கு பதிவாகி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 21, 2019, 07:13 PM IST
சட்டசபைதேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!! title=

18:35 21-10-2019
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று 6 மணியுடன் நிறைவுபெற்றது.


சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 76.41 சதவீதமும், நாங்குநேரி தொகுதியில் 62.32 சதவீதமும் வாக்கு பதிவாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இதேப்போன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று நடைபெற்று வருகிறது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும், அதேபோல ஹரியானாவில் இல்ல 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை அடுத்து வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Trending News