Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) நடத்தப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2021, 06:51 AM IST
Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் title=

தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், இம்முறை இந்த தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா மூன்றாவது அலையை (Corona Virus Third Wave) கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த 19-ம் தேதி நடந்த இரண்டாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது 16.43 லட்சம் பேரும், 26-ம் தேதி நடந்த மூன்றாவது முகாம் நடைபெற்றது. அப்போது 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நான்காவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 3-ம் தேதி நடந்தது. அப்போது 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்பட உள்ளது. இதில் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு  தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News