சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 9, 2021, 04:13 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம் title=

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Cheif Minister MK Stalin) பதவியேற்ற நாள் முதல் பல அதிரடிகளை செய்து வருகிறார். அந்தவகையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பதவி ஏற்ற மு. க. ஸ்டாலின் அவர்கள் அன்றைய தினமே தமிழக முதல்வரின் தனி செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். அது போல் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

ALSO READ | Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'..  மத்திய அரசின் 'ரியாக்ஷன்'

இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ககன் தீப் சிங் பேடி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தற்போது தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளராக உள்ளார்.

முன்னதாக இன்று காலை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டதில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை.,

* அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.
* அனைத்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது, ஆக்சிஜன் வீணாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிப்பது, மருத்துவமனை வசதிகள் மற்றும் நோயாளிகள், ஊழியர்களுக்கான உணவு வசதிகளை மேம்படுத்த வேண்டும் .
* அனைத்து மாவட்டங்களில் தடுப்பூசி பயன்பாட்டை உயர்த்தும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து பணியாற்றும் வகையில் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி உறுதி செய்ய வேண்டும்.
* சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, சேலம், மதுரை திருநெல்வேலி போன்ற இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கண்காணிப்பது, இவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News