நேர்மையான அரசியல்வாதிகள் அனைவரையும் சந்திப்பேன் - கமலஹாசன்!

பரபரப்பான அரசியல் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை தி.நகரில் சந்தித்து பேசினார்.

Last Updated : Feb 17, 2018, 04:13 PM IST
நேர்மையான அரசியல்வாதிகள் அனைவரையும் சந்திப்பேன் - கமலஹாசன்! title=

பரபரப்பான அரசியல் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை தி.நகரில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் நடிகர் கமலஹாசன் செய்தியார்களிடம் பேசியதாவதது...

  • "எனது மக்கள் பணி சிறக்கவே நல்லகண்ணு அவர்களை சந்தித்து பேசினேன். இச்சந்திப்பு கட்சிக்கு அப்பாற்பட்டது. 
  • மக்களுக்கு யார் சேவை செய்தாலும் அவர்களை மதிப்பேன். நேர்மையாக வாழும் மனிதர்களுடனான சந்திப்பு எனக்கு பலத்தைச் சேர்க்கும் என நம்புகின்றேன். 
  • கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வரும் நல்லகண்ணு அவர்களை சந்தித்தேன். அவரை மட்டும் அல்ல மற்ற நல்ல தலைவர்கள் அனைவரையும் சந்திப்பேன். 
  • வரும் 21-ம் நாள் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்."

என தெரிவித்துள்ளார்.

பின்னர், இச்சந்திப்பித்து குறித்து நல்லக்கண்ணு அவர்கள் தெரிவிக்கையில் இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என தெரிவித்துள்ளார்!

Trending News