Kamal Haasan: ‘நான் துணை நிற்கிறேன்’ மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த கமல்..!

Kamal Haasan On Westlers Protest: நடிகர் கமல்ஹாசன், டெல்லியில் நடைப்பெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Written by - Yuvashree | Last Updated : May 24, 2023, 03:31 PM IST
  • கடந்த ஒரு மாத காலமாக மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
  • இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
  • போராட்டகாரர்களுக்கு ஆதரவாக கமல் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Kamal Haasan: ‘நான் துணை நிற்கிறேன்’ மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த கமல்..! title=

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகருமான கமல்ஹாசன், டெல்லியில் 1 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தான் நிற்பதாக ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். 

பாலியல் புகார்:

பா.ஜ.க கட்சியின் முக்கிய உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தனர். வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பிரிஜ் பூஷனை தலைவர் பதவியிலிருந்து நீக்க கோரியும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது இரண்டு பதிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையும் நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டம் மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தாலும் இதுகுறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. மல்யுத்த வீராங்கனைகளும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஆதரவோடு தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க | Nitesh Pandey: பாலிவுட்டை துரத்தும் சோகம்..ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்தி சீரியல் நடிகர்..!

கமல் ஹாசன் ட்வீட்:

நடிகரும் அரசியல் பிரமுகருமான கமல் ஹாசன், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர்களை நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக போராட வைக்க வேண்டிய நாம், அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக போராட வைத்து விட்டோம். இந்தியர்களே, நாம் யார் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்? நம் நாட்டின் விளையாட்டு வீரர்கள் மீதா? அல்லது அதிக  குற்ற பின்னணி கொண்ட ஒரு அரசியல் வாதியின் மீதா?” என்று இந்தியர்களுக்கு ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார் கமல். மேலும், “நான் எனது சாம்பியன்களுக்கு துணை நிற்கிறேன் (#IStandWithMyChampions) என்ற ஹேஷ்டேக்கையும் கமல் தனது பதிவுடன் இணைத்துள்ளார். 

ஆதரவும் எதிர்ப்பும்:

கமலின் இந்த பதிவிற்கு சிலர் ஆதரவும் சிலர் வன்மம் பொருந்திய கருத்துகள் நிறைந்த பதிவையும் வெளியிட்டு வருகின்றனர். ஒரு ரசிகர் “பெண்களுக்காக நீங்கள் இப்படி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார். அதே போல இன்னொரு ரசிகரும் “போராடுபவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கட்டும். இது குறித்து இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

Kamal Haasan
ஒரு சில ரசிகர்கள் “டாஸ்மாக் குறித்த பிரச்சனைகளுக்கு ஏன் நீங்கள் வாய் திறக்கவில்லை?” என்று கோபத்தை கக்கி வருகின்றனர். இன்னும் சிலர், “விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குறித்து நீங்கள் வாய் திறக்காததது என்?” என்றும் கேட்டுள்ளனர். ஆனால், இது குறித்த கமல் தனது மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் “இது கடந்து போக்கூடிய விஷயமல்ல” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | Priyanka Chopra: ‘அந்த இயக்குநர் என் உள்ளாடையை பார்க்க விரும்பினார்’ பாலிவுட் குறித்து பகீர் தகவல் கூறிய பிரியங்கா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News