Lockdown: புதுச்சேரியில் ஜூன் 30 வரை நீட்டிப்பு; எவைக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2021, 09:09 AM IST
  • ஊரடங்கு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் திறக்க அனுமதி
  • மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு தடையில்லை.
Lockdown: புதுச்சேரியில் ஜூன் 30 வரை நீட்டிப்பு; எவைக்கு அனுமதி title=

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு வீழ்ச்சி அடைந்து வருகிறது. தமிழகத்திலும் தொற்றின் அளவில் படிப்படியாக வீழ்ச்சியைக் காண முடிகிறது. 

இதற்கிடையில் புதுச்சேரியில் (Puducherry) கொரோனா தொற்று (Corona Spread) பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (Lockdown Update) அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 8,000-க்கும் கீழ் சென்றது கொரோனா பாதிப்பு, 189 பேர் உயிர் இழப்பு

என்னென்ன தளர்வுகள்

* அனைத்து திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் திறக்க அனுமதி இல்லை.
* சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
*  அனைத்து அரசு அலுவலகங்களும் வழிகாட்டு வழிமுறைகளுடன் இயங்கும்.
* கொரோனா பணிகளில் ஈடுபடுவோரை மீண்டும் துறைப்பணிக்கு உடனடியாக அழைக்க வேண்டாம். 
* 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அனைத்து துறையினரும் உறுதிப்படுத்த வேண்டும்.
* அனைத்து வணிக கடைகளும் காலை 9 முதல் இரவு 9 வரை திறந்திருக்க அனுமதி
* காய்கறி, பழக்கடைகள் காலை 5 முதல் இரவு 9 வரை திறந்திருக்க அனுமதி
* தனியார் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 வரை செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
* ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 வரை செயல்பட அனுமதி
* டீக்கடைகள், ஜூஸ் கடைகளும் இரவு 9 வரை செயல்பட அனுமதி
* மதுபானக்கடைகள், சாராயக்கடைகள் காலை 9 முதல் இரவு 9 வரை இயங்கலாம். 
* பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் இரவு 9 வரை இயங்கலாம்.
* மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு தடையில்லை.
* கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 முதல் 9 வரை நடைப்பயிற்சி செல்வோருக்காக திறக்கப்படும்.
* வழிபாட்டு தலங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும். 
* திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம். 
* இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி
* விளையாட்டு தொடர்பான பயிற்சி நிகழ்வுகளுக்கு அனுமதி
* திரைப்படம், தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி (100 பேருக்குள் கொரோனா வழிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தலாம்)

ALSO READ | COVID-19: பள்ளிகள் திறப்பதைப் பற்றி மத்திய அரசு கூறுவது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News