பெரம்பலூர் : உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரில் உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 3, 2024, 04:50 PM IST
  • பெரம்பலூரில் சோக சம்பவம்
  • இறந்த தாய் உடலுக்கு பூஜை
  • மகனும் தற்கொலை செய்து கொண்டார்
பெரம்பலூர் : உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை title=

பெரம்பலூரில் இறந்த தாயை உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் மகன், அவரது உடலுக்கு பூஜை செய்திருக்கிறார். துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் ரோவர் ஆர்ச் சாலையில், முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில், காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும், புகைப்படக் கலைஞரான ஸ்ரீராம் என்ற 35 வயது மதிக்கத்தக்க ஆணும் தூக்கில் தொங்கிய நிலையிலும், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்,இறந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தின் அருகே எலுமிச்சை பழம், தர்ப்பைப்புல் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும்  சமையலுக்கு பயன்படுத்தப்படும்  மசாலா பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த பெரம்பலூர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் சடலத்திற்கு அவரது மகன் பூஜை செய்திருக்கலாம் என சந்தேகம் கொண்டனர்.  அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. தாயும், மகனும் ஒரே இடத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், இது குறித்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News