பெருமை!! இந்தியாவில் முதல் முறையாக திருநங்கையை சப்-இன்ஸ்பெக்டராகிய தமிழகம்

Last Updated : Apr 1, 2017, 01:58 PM IST
பெருமை!! இந்தியாவில் முதல் முறையாக திருநங்கையை சப்-இன்ஸ்பெக்டராகிய தமிழகம்  title=

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஒரு திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். 

பல இன்னலுக்கு பிறகு அவருக்கு தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார். 

இந்தியாவிலேயே முதல் முறையாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள் உள்பட சக பயிற்சியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போராடி பெற்ற பதவியை அவர் முழுமையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பிரித்திகா யாஷினிக்கு தர்மபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது. 

Trending News