10, 11, 12 மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு

மே 5ஆம் தேதி 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமென தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 2, 2022, 06:03 PM IST
  • மாணவர்களுக்கு தொடங்கியது பொதுத் தேர்வு
  • 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே5ல் பொதுத்தேர்வு
  • தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை அறிவிப்பு
10, 11, 12 மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு  title=

கொரோனா பரவல் குறைந்திருப்பதால் தமிழ்நாட்டு பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியிருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்படாமல் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு நிச்சயம் பொதுத்தேர்வு நடத்தப்படுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்தார். 

Students

அதன்படி, மே 5ஆம் தேதி 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்குமென தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 3,119 மையங்களில் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்வை 26.76 லட்சம் மாணவர், மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

மேலும் படிக்க | மாணவ, மாணவிகளின் வளர்ச்சி: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகள்

பொதுத்தேர்வு நடப்பதற்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர், மாணவிகள் தேர்வுக்கு தயாராக தொடங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்..மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு ப.சிதம்பரம் ஆதரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News