வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை! 

Last Updated : Jul 22, 2018, 01:28 PM IST
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை! title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை! 

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்...

''தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. 

 

Trending News