இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Last Updated : Jun 18, 2017, 09:17 AM IST
இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு title=

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதைக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதி வரை உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 8 சென்டிமீட்டர் அளவுக்கு கூடுதல் மழை பெய்தது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News