ஜெயக்குமார் vs பொன்முடி: செம்மண் வழக்கில் புதிய மனுவால் புதிய சிக்கல்

செம்மண் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தாக்கல் செய்திருக்கும் மனுவில், அவர் நேரில் ஆஜராக வரும் 25 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2023, 04:36 PM IST
  • பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கு
  • புதிய மனுவை தாக்கல் செய்த அதிமுகவின் ஜெயக்குமார்
  • நேரில் ஆஜராக விழுப்புரம் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு
ஜெயக்குமார் vs பொன்முடி: செம்மண் வழக்கில் புதிய மனுவால் புதிய சிக்கல் title=

செம்மண் குவாரி வழக்கு: 

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.  இதன்மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

முன்னாள் அமைச்சர் ஆஜராக உத்தரவு

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் சீனிவாசன் மூலமாக கடந்த 8-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அம்மனுவில் கூறியிருந்தார்.

அலிபாபா அமைச்சரவை

இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இம்மனு மீதான விசாரணை வருகிற 25-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் மனுதாரரரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், " அலிபாபாவும்நாற்பது திருடர்களும் என்பதை போல அலிபாபாவும் 38 அமைச்சர்களும் என்றே அரசு உள்ளது. தார்மீக அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரகூடாது என நீதிமன்றம் கொட்டு வைத்தும் கூட, காது கேட்காதவர்கள்போல் உள்ளார்கள்." என பேசினார். 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News