#Sterlite குறித்து 18-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு!!

Last Updated : Jul 5, 2018, 11:39 AM IST
#Sterlite குறித்து 18-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு! title=

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு!!

தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராமபகுதியில், வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக, ஆலைக்கு அருகில் வசித்து வந்த கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆலையை மூடகோரி தொடர் போராட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தொடர் போராட்டத்தின் 100_வது நாளான அன்று காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து, மேலும் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலை மூடப்பட்டது.

இதை தொடர்ந்து, ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நேற்று மனுத்தாக்கல் செய்ததது. இந்த மனுவானது இன்று விசாரனனைக்கு வந்தது. 

அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது! 

 

Trending News