COVID-19 Update: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா, 6,596 புதிய தொற்று பதிவு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.  தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 23, 2021, 07:56 PM IST
  • தமிழகத்தில் இன்று 10,432 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 166 பேர் இறந்தனர்.
  • தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்துள்ளது.
COVID-19 Update: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா, 6,596 புதிய தொற்று பதிவு title=

சென்னை:  இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.  தமிழகத்திலும் (Tamil Nadu) ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. 

தமிழ்நாட்டில், இன்று 6,596 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,43,415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 166 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,746ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 10,432 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இன்று மொத்தமாக 1,70,105 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 6,596 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  

ALSO READ: ஒரேநாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி இந்தியா சாதனை

இது தவிர தவிர அரியலூரில் 67 பேரும், செங்கல்பட்டில் 277, சென்னையில் 396, கோவையில் 793, கடலூரில் 168, தர்மபுரியில் 102, திண்டுக்கல்லில் 63, ஈரொட்டில் 686, கள்ளக்குறிச்சியில் 122, காஞ்சிபுரத்தில் 92, கன்னியாகுமரியில் 122, கரூரில் 87, கிருஷ்ணகிரியில் 152, மதுரையில் 120, நாகப்பட்டினத்தில் 119, நாமக்கல்லில் 269, நீலகிரியில் 125, பெரம்பலூரில் 44, புதுக்கோட்டையில் 81, ராமநாதபுரத்தில் 42, ராணிப்பேட்டையில் 103, சேலத்தில் 472, சிவகங்கையில் 92, தென்காசியில் 49,  தஞ்சாவுரில் 338, தேனியில் 75, திருப்பத்தூரில் 55, திருவள்ளூரில் 183, திருவண்ணாமலையில் 173, திருவாரூரில் 77, தூத்துக்குடியில் 85, திருநெல்வேலியில் 41, திருப்பூரில் 419, திருச்சியில் 247, வேலூரில் 74, விழுப்புரத்தில் 95, விருதுநகரில் 91 பேர், என்றர் அளவில் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த 34 நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 7,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பொது முடக்க அறிவிப்புக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவு குறைந்துள்ளது

ALSO READ: COVID-19 தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News