சோபியா-விற்கு துணையாக களமிறங்கிய தமிழக தலைவர்கள்!

பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டதாக தமிழக மாணவி சோபியா-வினை கைது செய்தமைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்!

Last Updated : Sep 4, 2018, 04:37 PM IST
சோபியா-விற்கு துணையாக களமிறங்கிய தமிழக தலைவர்கள்! title=

பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டதாக தமிழக மாணவி சோபியா-வினை கைது செய்தமைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்!

நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா நேற்று மாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது....

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தெரிவிக்கையில்...

TTV தினகரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவுத...

Trending News