தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற பெண்! சிறிது நேரத்தில் தானும் உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூரில் பெண் ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 18, 2023, 12:35 PM IST
  • பட்டுக்கோட்டையில் ஒரு பெண் தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.
  • குழந்தை பிறந்தவுடன் அதை கொன்றுள்ளார்.
  • அதிக ரத்தப்போக்கு காரணமாக சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற பெண்! சிறிது நேரத்தில் தானும் உயிரிழந்த சோகம்! title=

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு தானே பிரசவம் பார்த்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? முழு விவரம் இதோ. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராசிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர், செந்தில். இவர் அதே பகுதியில் செண்ட்ரிங் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவியின் பெயர் வசந்தி. இவருக்கு 40 வயது ஆகிறது. வசந்தி-செந்தில் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வசந்தி சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். 

தனக்குத்தானே பிரசவம்-குழந்தை கொலை!

வசந்திக்கு இன்று (ஞாயிறு, செப்டம்பர் 10) காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனக்கு தானே வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் அதன் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு, அக்குழந்தையை பெயிண்ட் வாலியில் வைத்து துணியால் மூடிவிட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மூட நம்பிக்கைகளை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும்: ராஜன் செல்லப்பா

செந்தில்-வசந்திக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். இதனால், கணவரின் வருமானம் போதாமல் ஏற்கனவே தாங்கள் வறுமை நிலையில் உள்ளதால் மேலும் ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது முடியாது என்று கருதி அவர் தன் குழந்தையை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. 

தாயும் பலி!

மருத்துவர்கள் யார் துணையும் இன்றி வசந்தி தனக்கு தானே வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டதால் இவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவருக்கு பிரசவம் முடிந்தவுடன் அதிகம் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தனக்கு அதிகம் மயக்கம் வருவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வசந்தியின் நிலையை வந்து பார்த்தவர்கள் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏர்பட்டிருப்பதையும் அவருக்கு அருகில் இருந்த வாளியில் குழந்தை கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ந்தனர். அவர்கள் உடனடியாக வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

போலீசார் விசாரணை:

தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையையும் கொன்று தாயும் பலியான சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கொட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். 

மேலும் படிக்க | “விஜய்ன்னு சொல்லாதீங்க..தளபதின்னு சொல்லுங்க..” புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News