உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran

  “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2021, 07:11 AM IST
  • உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் டிடிவி தினகரன் அறிவிப்பு
  • அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
  • திமுகவை தோற்கடிக்க சசிகலா வேண்டுகோள்
உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran  title=

சென்னை:  “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் அமமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதியாக தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சசிகலா சிறைதண்டனை முடிந்து விடுதலையாகி சில வாரங்களே ஆகிறது. சசிகலாவின் தமிழக வருகை, தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பதவிக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டதில்லை என கூறி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சசிகலா. இது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தினகரனுக்கு இடியாக இறங்கியது.

Also Read | அரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி

ஆனால், அரசியலில் இறங்கவில்லை என்று சொன்ன சசிகலா (Sasikala), தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமைய, பொது எதிரியான திமுகவை வீழ்த்த தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில், திரு.அசதுத்தீன் உவைசி அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன்  கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு” என டிடிவி தினகரன் ட்வீட் செய்திருந்தார். 

Also Read | சசிகலாவின் பயணம், சிறையில் இருந்து சிம்மாசனத்திற்கு இட்டுச் செல்லுமா?

பாஜகவின் பி டீம் என அழைக்கப்படும் அசதுதீன் ஒவைசியின் (Asaduddin Owaisi) AIMIM கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது பற்றி, பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக, முஸ்லிம் வாக்குகளை பிரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என கூறி பீதியை கிளப்பியிருக்கிறார்.

ஜெயலலிதா இறந்த சில நாட்களில் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அன்றைய முதலமைச்சரும், இன்றைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து, தர்மயுத்தம் தொடங்குவதாக சொன்னது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News