கந்தன்சாவடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

சென்னை கந்தன்சாவடியில் கட்டிடம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2018, 09:15 AM IST
கந்தன்சாவடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு! title=

சென்னை கந்தன்சாவடியில் கட்டிடம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் அமைக்கும் பணிக்காக கட்டிடத்தின் பின்புறத்தில் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பணியில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். இதற்காக 10க்கும் மேற்பட்ட இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தூண்களின் மேல் இரும்பு சாரம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு சாரம் அதிக பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது பலியானவர் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. மேலும் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த சாரம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.

Trending News