கணவனை கடத்திய கந்துவட்டி கும்பல்! மனைவியை வரச்சொல்லி மிரட்டியதால் நடந்த விபரீதம்!

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் கணவனை கடத்தி வைத்து மனைவியை வர சொல்லி மிரட்டியதால் தூக்கிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : Dec 8, 2023, 01:26 PM IST
  • நாள் ஒன்றுக்கு 6000 ரூபாய் வட்டி.
  • வட்டியை தராததால் கடத்தி வைத்து சித்திரவதை.
  • மனைவி தூக்கிட்டு தற்கொலை.
கணவனை கடத்திய கந்துவட்டி கும்பல்! மனைவியை வரச்சொல்லி மிரட்டியதால் நடந்த விபரீதம்!  title=

விருத்தாசலத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு செல்வி வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த விருதாச்சலம் காவல்துறையினர், செல்வியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படிக்க | புயல் பாதிப்பு... தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்வியின் கணவரான தினேஷ்குமார் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, விருதாச்சலத்தை சேர்ந்த செந்தில் முருகன் என்பவரிடம் கந்துவட்டிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்துக்காக நாள் ஒன்றுக்கு 6000 ரூபாய் வட்டியாக கொடுக்க வேண்டுமாம். அவ்வாறு வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி கட்டவில்லை என்று நேற்று தினேஷ்குமாரை, செந்தில்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அதோடு தினேஷ்குமாரின் மனைவி செல்வி இவர்களிடம் வந்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என செல்போனில் செல்விவிடம் கந்துவட்டி கும்பல் மிரட்டியதாக தெரிகிறது. 

இதனால் கடும் மன வேதனை அடைந்த செல்வி, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் பணம் வாங்கிய கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த தினேஷ்குமார் வீட்டில் சென்று பார்க்கும் போது, அவரது மனைவி செல்வி தற்கொலை செய்துகொண்டதை கண்டு கதறி அழுதுள்ளார். நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு அடாவடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கணவனை கடத்தி மனைவியை அவர்கள் இடத்துக்கு வரச்சொன்ன கந்துவட்டி கும்பலுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என செல்வியின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | சென்னையில் மழை நின்றாலும் தற்போது தொடங்கியுள்ள புதிய பிரச்சனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News