கிருஷ்ணகிரியில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம்! பறிபோன உயிர்!

போச்சம்பள்ளி அருகே யூடியூப் பார்த்து இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க முயற்சித்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 23, 2023, 01:32 PM IST
  • youtube மூலம் இயற்கை அலுவலர் என்ற பெயரில் பிரசவம் பார்த்த கணவன்.
  • போலீசார் லோகநாயகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
  • மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க தேவையான ஏற்பாடுகளை செய்த கணவன்.
கிருஷ்ணகிரியில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம்! பறிபோன உயிர்!  title=

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த  மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.  இயற்கை விவசாயத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட மாதேஷ் அவரது விலை நிலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதே போல உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், வீட்டிலேயே இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

இந்த சூழலில் லோகநாயகி கருவுற்றுள்ளார். ஆனாலும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லாத மாதேஷ் தனது மனைவிக்கு கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளையும் முழுமையாக போடாமல் விட்டுள்ளார். லோகநாயகி கர்ப்பமாக இருப்பது தெரிந்து அங்கிருந்த கிராம செவிலியர் தாமாக முன்வந்து அரசு பதிவேட்டில் லோகநாயகி கர்ப்பமாக இருந்ததை பதிவேற்றம் செய்துள்ளார் .மேலும், அவருக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டும் சத்து மாத்திரைகள் கொடுக்க பலமுறை அழைத்தும் மாதேஷ் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

இதனால் ஒரு கட்டத்தில் செவிலியர்கள் தொல்லை தாங்காமல் தனது மனைவியின் ஊரான புளியம்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார் மாதேஷ். இங்கு யாருக்கும் தெரியாமல் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று விடியற்காலை தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க ஏற்பாடுகளை செய்துள்ளார் மாதேஷ்.  பின்னர் விடியற்காலை சுமார் 4 மணி அளவில் லோகநாயகிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட நேரம் ஆகியும் குழந்தை பிறந்த பின்னர் தாயின் வயிற்றில் இருந்து நச்சுக்கொடி வெளியே வராமல் இருந்துள்ளது.

மேலும் படிக்க | நீட் தேர்வு: எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் இருக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதன்பின்னர் கொஞ்ச நேரத்தில் சுய நினைவை இழந்துள்ளார் லோகநாயகி. இதனையடுத்து அவரை ஆட்டோ மூலம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்பொழுது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே இறந்த தனது மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் பணிகளை மாதேஷ் மேற்கொண்டுள்ளார்.

 இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சுகாதார ஆய்வாளர் சசிகுமார் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த  போலீசார் லோகநாயகி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை மீட்ட போலீசார் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில்  போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஷுடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் பிரசவத்தை அலட்சியமாக எண்ணி youtube மூலம் இயற்கை அலுவலர் என்ற பெயரில் பிரசவம் பார்த்த கணவனின் இந்த செயல் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | குடும்பத்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..! என்ன காரணம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News