குடும்பத்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..! என்ன காரணம்..?

சேலத்தில் தாய்  தந்தை மனைவி மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒரு நபர்  தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி  

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2023, 01:13 PM IST
  • சேலத்தில் தன் குடும்பத்தையே விஷம் வைத்து ஒரு நபர் கொலை செய்துள்ளார்.
  • பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளார்.
  • இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..! என்ன காரணம்..?  title=

சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவியின் பெயர் வசந்தா. இந்த தம்பதிக்கு திலக் என்ற மகன் இருந்தார். திலக்கிற்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஆறுவயதில் சாய் கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். 

கடன் தொல்லை காரணமாக விபரீதம்..! 

திலக், சிறிது காலம் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரானா தொற்று காரணமாக சொந்த ஊர் திரும்பி உள்ளார். பின்னர், வீட்டிலேயே இருந்தபடி ஆன்லைன் டிரேடிங் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகளவு கடன் பெற்றுள்ளார். திலக்கின் குழந்தை சாய் கிருஷ்ணா, வாய் பேச முடியாத நிலையில் இருந்துள்ளான். இதனால் திலக் தனது குழந்தைக்கு தொடர் மருத்துவ சிகிச்சைகளின் செலவுகளையும் பார்த்து வந்துள்ளார். கடன் பிரச்சனை மற்றும் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், திலக் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | நீட் தேர்வு: எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் இருக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திலக், நேற்று இரவு மேல் மாடியில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு கீழ் பகுதியில் இருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கும் விஷம் கொடுத்துவிட்டு மேல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இரவு விடிந்து பார்த்தபோது வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது கீழ்மாடியில் தந்தை உயிரிழந்த நிலையில் தாய் உயிருக்கு போராடி உள்ளார் மேல்மாடி சென்ற போது திலக் தூக்கில் தொங்கியபடி இருந்ததோடு அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் இறந்து கிடந்தனர் 

தகவலை அறிந்து விரைந்து வந்த போலீஸார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டதோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த வசந்தாவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நான்கு உடல்களையும் கைப்பற்றி காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸார் விசாரணை: 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திலக் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு ஆன்லைன் டிரேடிங் மூலம் தொழில் செய்ததில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதும் இதனை சரிகட்ட அதிக அளவில் கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் தனது ஒரே மகன் வாய் பேச முடியாமல் இருந்த காரணத்தினால் குழந்தைக்காக பல லட்சங்களை செலவு செய்து பலன் இல்லாமல் போனதால் விரட்டி அடித்ததாக குறிப்பிடுகிறது. 

இதனால் தான் இறந்தால் தன்னுடைய தந்தை தாய் மனைவி மகன் ஆகியோர் அனாதையாக கூடும் என கருதி அனைவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News