Google Doodle: இந்திய சமூக சீர்திருத்தவாதி Kamaladevi Chattopadhyay!

இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடுல்.

Last Updated : Apr 3, 2018, 08:48 AM IST
Google Doodle: இந்திய சமூக சீர்திருத்தவாதி Kamaladevi Chattopadhyay! title=

இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடுல்.

கமலா சட்டோபாத்தியாயா 3 ஏப்ரல் 1903 அன்று மங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை ஆனந்தையா தரேஸ்வர்  மாவட்ட ஆட்சியராக மங்களூரில் இருந்தார், இவரின் தாயார் பெயர் கிரிஜாபாய் ஆகும்.

கமலாதேவி படிப்பில் கெட்டிக்காராக இருந்தார் இவரது பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு வரும் மகாதேவ கோவிந்த ராணடே, கோபாலகிருஷ்ண கோகலே, ராமாபாய் ராணடே,  அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற  தலைவர்களின் உரையாடல்களைக் கேட்டு, இளம் வயதிலேயே சுதேச இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.

இவர் சமசுகிருத பாரம்பரிய நாடக்கலையான  கேரள- கூடியாட்டத்தை, அதில் சிறந்த ஆசிரியரும் அபிநயத்தில் சிறந்த நடன ஆசிரியரான பத்மசிறீ மணி மாதவ சாக்கியார் என்பவரின் ஊரான கிள்ளிக்குரிசிமங்களத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து கற்றார். 

இவரது இளமைக் காலம் சோகம் நிறைந்ததாக இருந்தது. இவரது முன்மாதிரியாக இருந்த இவரது அக்காள், சகுணா, அவரது இளம் வயதில்  திருமணம் முடிந்த உடனேயே,  இறந்து போனார். கமலாவின் தந்தை அவருக்கு ஏழு வயதிருக்கும் போதே இறந்தார்.

இவருக்கு 1917-ம் ஆண்டு, 14 வயதானபோது திருமணம் நடந்தது ஆனால் இரண்டாண்டுகளில் கணவர் இறந்தார்.
இதற்கிடையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவரான சுஹாசினி சட்டோபாத்யாவின்  இளைய சகோதரி சரோஜினி நாயுடு, அறிமுகமானார். பின்னர் தங்கள் திறமையான சகோதரனான அரியை கமலாதேவிக்கு அறிமுகப்படுத்தினர். அவர் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர்- எழுத்தாளர்,  நடிகர் போன்ற பன்முகத்தன்மை உடையவராக இருந்தார். கமலாதேவிக்கு இருபது வயது இருக்கும்போது அரிந்திரநாத் சட்டோபாத்யாய உடன் திருமணம் நடந்த்து. 

இவர் முதலில்  ஊமைப்படங்களில் நடித்தார். இதில் ஒன்று கன்னடத் திரையுலகின் முதல் படமான, மிரிச்சகட்டிகா என்ற படத்தில் நடித்தார். இரண்டாவது படமாக தான்சேன் என்ற இந்தி படத்தில் 1943-ம் ஆண்டு நடித்தார்.  

திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு, கமலாதேவியும் அவர் கணவரும் பிரிந்தனர்.  கமலாதேவி விவாகரத்துக்குப் பெற்றார்.

அவர்களது திருமணத்திற்கு கொஞ்ச காலத்திற்கு பிறகு  அரிந்திரநாத் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கோண்டு, லண்டன் சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து கமலாதேவி, அங்கு சென்று அவருடன் சேர்ந்தார், அவருடன் சேர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்ஃபோர்ட் கல்லூரியில் சமூகவியல் பாடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923ம் ஆண்டு அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி தளத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். 

1926ம் ஆண்டு இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் கசின்சு  என்பவரை சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் ஆவார். போட்டியிட்ட இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அடுத்த ஆண்டில், அனைத்து-இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக ஆனார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அ.இ.ம.மா. கிளைகள் நாடு முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வ திட்டங்கள் கொண்டு மதிப்புள்ள தேசிய அமைப்பானது. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி அய்ரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான  ஏழு பேர்களில் இவரும் ஒருவராக இருந்து மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பையை பங்கு சந்தையில்  விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் நிலைமையையை இந்தியாவின் பிரதிநிதியாக சென்று இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவைத் திரட்டினார்.

இந்தியா சுதந்திரமடையும்போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்த வேளையில் மக்களுக்கு பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

இவ்வாறு மக்கள் மறுவாழ்வுக்கும் அதே சமயம் அவர்கள் இழந்த கைவினைத் தொழிலுக்கு உதவும் பணியினை இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி ஆகியவற்றிற்கு  சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் பெரும் புத்துயிர் அளிக்க வேண்டும் என பொறுப்பெடுத்து நவீன இந்தியாவில் அதன்  மிகப்பெரிய மரபை காக்க பாடுபட்டார்.

விருதுகள்:-

1955-ல் இந்திய அரசு  பத்ம பூசன் விருது.
1987-ல் பத்ம விபூசன் விருது.
1966-ல் ராமன் மகசேசே விருது.
சங்கீத் நாடக அகாடமி விருது. 
1974-ல் வாழ்நாள் சாதனைக்கான விருது.
1977-ல் யுனெஸ்கோ அமைப்பு கைவினைப். ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக விருது.

Trending News