Maruti Suzuki Price Hike: அதிகரித்தது மாருதி சுஸுகி கார்களின் விலை

மாருதி சுஸுகி வாகனங்களின் விலை உயர்த்தப்பட்ட விலை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக மஹிந்திரா, டொயோட்டா, ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2022, 09:02 PM IST
  • கார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுஸுகி
  • விலை உயர்வு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது
  • இந்த ஆண்டில் இரண்டாவது விலை உயர்வு இது
Maruti Suzuki Price Hike: அதிகரித்தது மாருதி சுஸுகி கார்களின் விலை  title=

புதுடெல்லி: மாருதி சுஸுகி வாகனங்களின் விலை உயர்த்தப்பட்ட விலை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக மஹிந்திரா, டொயோட்டா, ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களும் ஏப்ரல் மாதத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

மாருதி சுஸுகி பலேனோ
மாருதி சுஸுகி இந்தியா தனது அனைத்து மாடல்களின் விலையையும் (Vehicle Price Hike) அதிகரித்துள்ளது. டெல்லியின் எக்ஸ்-ஷோரூம் விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்நிறுவனத்தின் வாகனங்களின் விலை 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதியின் வாகனங்களில் செய்யப்பட்ட இந்த விலை அதிகரிப்பு ஏப்ரல் 18, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி , வாகனங்களின் விலை உயர்வுக்கு உள்ளீட்டு விலையே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. உண்மையில், நிறுவனம் தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 6 ஆம் தேதியே உயர்த்துவதாக அறிவித்தது. இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஓராண்டில் பல்வேறு இடுபொருள் செலவுகள் அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விலைவாசி உயர்வு மூலம் கூடுதல் செலவில் சிலவற்றை வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்குவது அவசியமாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பலரின் கார் கனவுகளை நிறைவேற்றிய Maruti Alto - புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்

மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டாவது முறையாக வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது 
2022 ஆம் ஆண்டில் மாருதி சுஸுகியின் வாகனங்களின் விலையில் இது இரண்டாவது அதிகரிப்பு ஆகும்.

முன்னதாக ஜனவரியில், நிறுவனம் விலையை  1.7 சதவீதம் அதிகரித்தது. மூலப்பொருள் விலை அதிகரிப்பால், வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அப்ப்போது நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் ஆல்டோ, பலேனோ, ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் போன்ற கார்களை மாருதி விற்பனை செய்கிறது.

மேலும் படிக்க | பிரெஸ்ஸாவுக்கு கிடைத்த 5 ஸ்டார் ரேட்டிங் - மகிழ்ச்சியில் மாருதி நிறுவனம்

மாருதி சுஸுகி தவிர வேறு சில நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன 
மாருதி சுஸுகி இந்தியா மட்டுமல்ல, வேறு சில நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன ஏப்ரல் 14 ஆம் தேதி மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் உயர்த்தியது.

அதன் பிறகு மஹிந்திரா கார்களின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10,000ல் இருந்து ரூ.63,000 ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப் தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 5 ஆம் தேதி உயர்த்தியது.

இது தவிர, ஆடி இந்தியா, பிஎம்டபிள்யூ, டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஏப்ரல் 1, 2022 அன்று வாகனங்களின் விலையை அதிகரித்தன.

இதனால் இந்தியாவில் வாகனங்கள் விலை உயர்ந்து வருகிறது 
எஃகு, அலுமினியம், பல்லேடியம் மற்றும் இதர உள்ளீட்டுப் பொருட்கள் போன்ற உலோகங்களின் விலைகள் உயர்வதன் விளைவாக இந்தியாவில் வாகனங்களின் விலை உயர்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்த்தப்பட்ட விலைகள், மீண்டும் புதிய நிதியாண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 400 கி.மீ செல்லும் டாடா நெக்ஸான் இந்தியாவில் எப்போது அறிமுகம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News