Pan Card Link: இதை செய்யாவிட்டால் பான் கார்டு செல்லாது! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

Pan Card Update: பான் கார்டு அப்டேட் தொடர்பான முக்கிய அறிவிப்பை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தேதிக்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அதனை நீங்கள் பயன்படுத்த முடியாது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 11, 2023, 06:09 PM IST
Pan Card Link: இதை செய்யாவிட்டால் பான் கார்டு செல்லாது! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

PAN Card link: நாடு முழுவதும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் பான் கார்டு, நிதி பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை என அனைத்திற்கும் ஆவணமாக இருக்கிறது. இதனால், பான் கார்டில் அவ்வப்போது சில அப்டேட்டுகளை செய்யுமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறது. இதனை மக்கள் சரியாக செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதனை செய்ய தவறும்போது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். 

Add Zee News as a Preferred Source

இப்போதும் ஒரு அறிவிப்பை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அதற்காக காலக்கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் தேதிக்குள் நீங்கள் உங்களின் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போய்விடும். அதனை ஒரு அடையாள சான்றாக நீங்கள் எங்கும் பயன்படுத்த முடியாது. இதற்காக நீங்கள் மீண்டும் பல்வேறு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியிருக்கும்.  

மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்

பான் கார்டு 

PAN (நிரந்தர கணக்கு எண்) என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் வழங்கப்படும் அடையாள எண். பான் என்பது ஒரு மின்னணு அமைப்பாகும். இதன் மூலம் தனிநபர்/நிறுவனத்திற்கான அனைத்து வரி தொடர்பான தகவல்களும் ஒரே பான் எண்ணில் பதிவு செய்யப்படும். இது தகவல்களைச் சேமிப்பதற்கான முதன்மைத் திறவுகோலாகச் பான் கார்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் பகிரப்படுகிறது.

மேலும் படிக்க | வார பலன் - மேஷம் முதல் கன்னி வரை; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

பான் கார்டு அப்டேட்

இந்நிலையில் தற்போது பான் கார்டு தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டுடன் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே பலமுறை வருமானவரித்துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், இப்போது காலக்கெடு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த தேதிக்குள் நீங்கள் ஆதார் எண்ணை உங்கள் பான் கார்டில் இணைக்காவிட்டால் அது செல்லாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பான் கார்டு செல்லாது

இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், " வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.03.2023-க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 01.04.2023 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கள் செயலிழந்துவிடும்" என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!

மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News