5 ஆவது வந்தே பாரத் ரயில்: சென்னை மைசூரு இடையே இயங்கும்

நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை மைசூரு இடையே இயக்கப்படும். வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

அதிவேகமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. புதுடெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் இதுவரை வந்தே பாரத் ரயில்கள் அண்மையில் இயக்கி வைக்கப்பட்டுள்ளன.

Video ThumbnailPlay icon

Trending News