திரிகோணமலையில் இருக்கிறாரா மகிந்த ராஜபக்ச? இலங்கையில் வலுக்கும் நெருக்கடி

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

ராஜபக்ச மர்மமான முறையில் பாதுகாப்பு வீரர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர் எங்கே உள்ளார் என்பது குறித்து பல வித வதந்திகள் பரவத் தொடங்கின.  பாதுகாப்புச் செயலரின் கூற்று இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

 

Trending News