Pegasus Spyware: தனது தொலைபேசி எண்ணை மாற்றிய பிரான்ஸ் அதிபர்; காரணம் என்ன

பெகாசஸ் ஸ்பைவேர்  மூலம் தான் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து பிரெஞ்சு அதிபர் தனது மொபைல் மற்றும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2021, 05:04 PM IST
  • பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App).
  • இது உளவு பணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட செயலியாகும்.
  • இம்மானுவேல் மக்ரோனுடன் மேலும் 14 பிரெஞ்சு அமைச்சர்களும் குறிவைக்கப்பட்டனர் என கூறப்படுகிறது.
Pegasus Spyware: தனது தொலைபேசி எண்ணை மாற்றிய பிரான்ஸ்  அதிபர்; காரணம் என்ன title=

Pegasus Spyware: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு பார்க்கும் மென்பொருள் பற்றிய செய்திகள் இந்தியாவில் மட்டுமல்லாது உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கபட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

பெகாசஸ் ஸ்பைவேர் என்பது இஸ்ரேலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான NSO உருவாக்கிய ஒரு செயலி (App).  இது உளவு பணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட செயலியாகும். 

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தொலைபேசியும் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) மூலம்  கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து,  பிரெஞ்சு அதிபர் தனது மொபைல் எண் மற்றும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளார்.

ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் வெளியான செய்தியில், மொராக்கோ தரப்பினரால் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  இம்மானுவேல் மக்ரோனுடன் மேலும் 14 பிரெஞ்சு அமைச்சர்களும் குறிவைக்கப்பட்டனர் என கூறப்படுகிறது. இருப்பினும், மொராக்கோ அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். பிரான்ஸ் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, பொய்யானவை என்று மொரோக்கோ கூறுகிறது

ALSO READ | Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் தொலைபேசியில் பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், 2016 முதல், பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ குழுமத்தின் இலக்கில் உள்ள  50,000 பேர் அடங்கிய பட்டியலில் அவரது மொபைல் எண் உள்ளது. 

பிரான்ஸ் உட்பட உலகின் பல நாடுகளின் ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் இந்த உளவுக்கான ஸ்பைவேர் தாக்குதலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியலில் இருந்து எத்தனை தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டன என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏதேனும் குற்றம் நடந்ததா என்பதை அறிய ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அல்ஜீரியாவில் உள்ள அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பெகாசஸ் ஸ்பைவேர்  மூலம் ஒருவரின் செல்போனில்  நுழைந்து, சாதாரணமாக உளவு பார்க்க இயலும் என கூறப்படுகிறது. iOS மற்றும் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் நுழைந்தால், அந்த  தொலைபேசியில் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், குறுந்தகவல்களை படிக்கவும் முடியும்.

மேலும், தொலைபைபேசியின் GPS அமைப்பை தானாகவே இயக்கி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என கண்காணிக்கவும் முடியும். அதோடு தொலைபேசியில் இருக்கும் கேமரா மற்றும் மைக்கை, அந்த குறிப்பிட்ட நபருக்கு தெரியாமலே இயக்கவும் முடியும் என கூறப்படுகிறது. End-to-end encryption (E2EE)  எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் படிக்க, பார்க்க இயலும். 

ALSO READ | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News