தற்காலிகமாக மூடப்பட்ட ஈஃபில் டவர்! காரணம் இதுதான்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Last Updated : May 21, 2019, 11:15 AM IST
தற்காலிகமாக மூடப்பட்ட ஈஃபில் டவர்! காரணம் இதுதான்! title=

பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈஃபில் டவர் உள்ளது. இந்த ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈஃபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈஃபில் டவர் என பெயரிடப்பட்டது. 

இந்த ஈஃபில் டவரை காண லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த ஈஃபில் டவர் ஒரு வாலிபரால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி இந்த ஈஃபில் டவரில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார். அவர் சிறிது தூரம் சென்ற பின்னர் அங்கிருந்த சில சுற்றுலா பயணிகள் கண்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து ஈஃபில் டவருக்கு வந்த அவர்கள், சுற்றுலா பயணிகளை தற்காலிகமாக அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த வாலிபரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் பயணிகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவவே, ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படும் என கூறினர். இதையடுத்து ஈஃபில் டவர் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. டவர் மீண்டும் இன்று உள்ளூர் நேரப்படி,  9.30 மணி அளவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Trending News