Scotland's Suicide Bridge: நாய்களின் ‘Suicide Point'; நீடிக்கும் மர்மம்

நாய்கள் தற்கொலைசம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் ஏதோ பேய் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இந்தப் பாலத்தில் 'White Lady' பெண் பேய் இன்னும் உலவுவதாக நம்பப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2022, 11:30 AM IST
  • நாய்கள் தற்கொலை செய்து கொள்ளும் மர்ம பாலம்.
  • விலகாமல் நீடிக்கும் மர்மம்.
  • பல ஆண்டுகளாக தொடரும் தற்கொலை சம்பவங்கள்
Scotland's Suicide Bridge: நாய்களின் ‘Suicide Point'; நீடிக்கும் மர்மம் title=

மனிதர்களில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக, மன அழுத்தம், காதல் தோல்வி அல்லது நிதி பிரச்சனை இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் விலங்குகள், குறிப்பாக செல்லப்பிராணிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

ஏனெனில் விலங்குகள் விஷயத்தில், தற்கொலை செய்து கொள்வது என்பது அனைவருக்கும் நம்ப முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்  என்பது தான் உண்மை நிலை. ஆனால் விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்ளும் என்பதை  பாலத்தில் இருந்து குதித்து தனதி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் தற்கொலைப் பாலம்

 ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பாலத்தில், நாய்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. பாலத்திற்கு வரும் நாய்கள், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்படுகிறது. ஸ்காட்லாந்தில் ஒரு பாலம் உள்ளது, அதில் இருந்து பல நாய்கள் குதித்து தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த பாலத்தின் உயரம் சுமார் 50 அடி என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான நாய்கள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளன; அதில் 50 நாய்கள் உயிரிழந்துள்ளன.

ALSO READ | Las Luminarias: ஸ்பானிஷ் திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்..!!

விலகாமல் தொடரும் மர்மம்

இந்த இடத்திற்கு வந்த பிறகு நாய்கள் தாங்களாகவே குதிப்பதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது என நியூயார்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. இந்த பாலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியதும், பாலத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

பேய் உலவுவதாக நம்பிக்கை

அதே சமயம் இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் ஏதோ பேய் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இன்றும் இந்த பாலத்தில் 'White Lady' என்ற பெண்ணின் பேய் உலவுவதாக நம்பப்படுகிறது. பேராசிரியர் பால் ஓவன்ஸ், இது குறித்து ஆராய்ந்த பிறகு, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். ஒருமுறை பாலத்தின் மீது நின்று கீழே பார்த்தபோது, ​​யாரோ பின்னாலிருந்து தொட்டதை உணர்ந்ததாக சொன்னார்.

தற்கொலை பாலம்

இன்றும் இந்த பாலம் மக்கள் முன் புரியாத புதிராக நிற்கிறது. அதே சமயம் நாய்கள் தற்கொலை செய்து கொண்டதில் உள்ள மர்மம் இன்று வரை மர்மம் விலகவில்லை.

ALSO READ | Video: இசைக்கருவியை எரித்து தாலிபான் அட்டூழியம்; கண்ணீர் சிந்தும் இசைக் கலைஞர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News