IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி

Naturally Nepal Tour Package: ஐஆர்சிடிசியின் நேபாள டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்குகிறது... காத்மாண்டு, பொக்ரா உட்பட நேபாளத்தின் முக்கியமான இடங்களைச் சுற்றி பார்க்க 38,400 கட்டணம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 27, 2022, 10:11 AM IST
  • குறைந்த விலையில் நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு
  • ஐஆர்சிடிசியின் ஆறு நாள் பயண திட்டம்
  • காத்மாண்டு முதல் பொக்ரா வரை பயணம் ரூ.38,400
IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி title=

Naturally Nepal Tour Package: ஐஆர்சிடிசியின் இயற்கையான நேபாள டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கும். ஆறு நாள், ஐந்து இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜில் காத்மாண்டு மற்றும் பொக்ரா ஆகிய இடங்களுக்கான பயணத்திற்கான கட்டணம் ரூ.38,400 மட்டுமே. இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) 6-நாள் மற்றும் 5-இரவு பயண திட்டத்திற்கு “நேபாளத்தின் இயற்கை" என்று அறிவித்துள்ளது. நேபாளத்தின் மிகவும் பிரபலமான கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களைச் சுற்றிப் பார்க்க அருமையான சந்தர்ப்பம் இது. 

இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, விமானம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் இருந்து காலை 7.45 மணிக்குப் புறப்பட்டு, டெல்லி விமான நிலையத்திற்கு சென்று, மாலை 3.45 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டுவைச் சென்றடையும்.

பேக்கேஜ் செலவில் விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்குதல், நேபாளத்தில் போக்குவரத்து, இலவச சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவு ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | IRCTC Tour: IRCTC சிறந்த டூர் பேக்கேஜ் அறிமுகம்

IRCTC இயற்கை நேபாள சுற்றுப்பயணத்தின் இரவில் ஹோட்டலில் தங்கிய பிறகு, அடுத்த நாள் பசுபதிநாத் கோயில், படன், தர்பார் சதுக்கம், திபெத்திய அகதிகள் மையம் மற்றும் சுயம்புநாத் ஸ்தூபி ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வார்கள். 

அதற்கு அடுத்த நாள் போக்ராவு மற்றும் மனோகமா கோயிலுக்கு செல்லலாம். அதற்கு அடுத்த நாள் சூரிய உதயத்தில் இமயமலையைப் பார்ப்பதற்காக சுரங்கோட்டிற்கு அதிகாலையில் செல்லலாம். இமயமலையில் சூரிய உதயத்தை கண்டு களித்த பிறகு, பின்யபாசினி கோயில், டெவில்ஸ் வீழ்ச்சி மற்றும் குப்தேஷ்வர் மகாதேவ் குகைக்கு செல்லலாம்.

அதற்கு டுத்த நாள் சுற்றுலாப் பயணிகள் காத்மாண்டுக்கு அழைத்து வரப்படுவார்கள், அங்கு அவர்கள் நகரத்தை சுற்றிப் பார்த்துவிட்டு நாள் முழுவதும் ஓய்வெடுக்கலாம். சுற்றுப்பயணத்தின் கடைசி மற்றும் ஆறாவது நாள், சுற்றுலா பயணிகள் காலை உணவுக்குப் பிறகு காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டு இந்தியா திரும்புவார்கள்.

மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News