திபட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.4-ஆக பதிவு!

இந்தியா-சீனா எல்லை பகுதி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Last Updated : Nov 18, 2017, 09:44 AM IST
திபட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.4-ஆக பதிவு! title=

திபட்: இந்தியா-சீனா எல்லை பகுதி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு அருணாச்சல பிரதேசத்தில் எதிரொலி என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் அதிவுகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சில வினாடிகள் உணரப்பட்டது. 

இந்தியா-சீனா எல்லை பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததால், இந்திய பகுதிகளிலும் இந்நிலந்நடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது. 

எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை!

Trending News