பகீர் சம்பவம்! தனது குழந்தைகளை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த கொடூர தம்பதியர்..!!

பாதுகாக்க வேண்டிய பெற்றோரே தங்கள் குழந்தைகளை விலங்குகள் போல் சங்கிலியால் கட்டி வைத்து அவர்களுக்கு போதிய உணவு கூட கொடுக்காமல் சித்திரவதையும் செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2021, 04:04 PM IST
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் குடும்பம்.
  • உணவு என்ற பெயரில், காய்ந்து போன பிரெட் வழங்கப்பட்டது.
  • வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே குழந்தைகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பகீர் சம்பவம்! தனது குழந்தைகளை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த கொடூர தம்பதியர்..!! title=

வாஷிங்டன்:  பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் இருக்க பாடுபடும் செய்தியைத் தான் கேட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு செய்த கொடுமையை கேட்டால் எவரும் துடித்துப் போவார்கள். பாதுகாக்க வேண்டிய பெற்றோரே தங்கள் குழந்தைகளை விலங்குகள் போல் சங்கிலியால் கட்டி வைத்து அவர்களுக்கு போதிய உணவு கூட கொடுக்காமல் சித்திரவதையும் செய்தனர்.

அமெரிக்காவின் (America) கலிபோர்னியாவில் வசிக்கும் ஜோர்டான் டர்பின் (Jordan Turpin) என்ற சிறுமி தனது பெற்றோரின் கொடுமையை விவரித்து கூறியது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  2018  ஆண்டு ஜோர்டான் எப்படியோ பெற்றோரின் பிடியில் இருந்து தப்பித்தார். தப்பிக்கும் அவருக்கு வயது 17 மட்டுமே. இதைத் தொடர்ந்து, காவல்துறையின் உதவியுடன், அவர் தனது மற்ற சகோதர சகோதரிகளையும் விடுவித்தார்.

தனக்கு 13 உடன்பிறப்புகள் இருப்பதாக ஜோர்டான் டர்பின் கூறினார். ஆரம்பத்திலிருந்தே அவளுடைய பெற்றோர்  மாற்றாந்தாய் போல் நடத்தினார்கள். நாள் முழுவதும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டனர். உணவு என்ற பெயரில், அவர்களுக்கு காய்ந்து போன பிரெட் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே குழந்தைகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் அடிக்கடி வெளியே சென்றார்கள், சுற்றித் திரிந்தார்கள்.  ஆனால் குழந்தைகள் வீட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜோர்டான் உட்பட அனைத்து குழந்தைகளும் தங்கள் தலைவிதி என்று கருதினர்.

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

ஜோர்டான் இது குறித்து விவரிக்கையில், 'நாங்கள் மெதுவாக மரணத்தை நோக்கி  பயணித்து கொண்டிருந்தோம். பிறகு ஒரு நாள் என் செயின் கட்டப்படாமல் கிடந்தது. நான் கொல்லப்பட்டாலும் எனக்கு இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என நினைத்தேன். நான் மிகவும் பலவீனமாக இருந்ததால், என் கைகளும் கால்களும் நடுங்கின. ஆனாலும், எப்படியோ ஜன்னல் வழியே இறங்கி ஓடினேன். அதன் பிறகு 911க்கு போன் செய்து முழு கதையையும் சொன்னேன்.

சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, ​​அங்கிருந்த காட்சியை பார்த்து அவர்களும் திகைத்தனர். குழந்தைகளை சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். அவனது நிலையைப் பார்க்கும்போது வெகு நாட்களாக உணவு சாப்பிடாமல் இருப்பது போல் தோன்றியது. குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்றோர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

ALSO READ | Viral Video: இணையவாசிகளை கவர்ந்த யானையின் LOVE ப்ரபோஸல்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News