மஹாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் போரியா வனப்பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை! 

Last Updated : Apr 22, 2018, 03:14 PM IST
மஹாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!  title=

மகாராஷ்ட்ரா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் போரியா வனப்பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை. 

மஹாராஷ்டிரா மாநிலம், கட்ச்ரோலி மாவட்டம், எடபள்ளி என்ற இடம் அருகே அமைந்துள்ள போரியா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தேடுதல் வேட்டையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 13 நக்சலைட்டுகள் சுட்டுகொள்ளபட்டுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்து வருகின்றனர். 

 

Trending News